உமா பாரதி: வழக்கை வாபஸ் பெறுகிறது கர்நாடகம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

உமா பாரதி மீதான எல்லா வழக்குகளையும் கைவிடத் தயாராக இருப்பதாக பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன் ஈத்கா மைதானத்தில் தேசியக் கொடியேற்றியது, அதைத் தொடர்ந்து நடந்தமதக் கலவரம், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியானது தொடர்பாக உமா பாரதி உள்ளிட்டபலர் மீது மாநில அரசு வழக்குப் பதிவு செய்தது.

இந் நிலையில் கடந்த 2002ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் முதல்வர் கிருஷ்ணாதலைமையிலான கர்நாடக அரசு, உமா பாரதி மீதான வழக்கை வாபஸ் பெறுவது எனமுடிவெடுத்தது.

ஆனால், திட்டமிட்டபடி வழக்கு வாபஸ் பெறப்படவில்லை. இதனால் தான் நிலுவையில் இருந்தஇந்த வழக்கில் உமா பாரதியைக் கைது செய்ய ஹூப்ளி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது.

இதையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த உமா நீதிமன்றத்க் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் உமா பாரதி மீதான வழக்கை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கர்நாடகஉயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உமா பாரதி மீதான வழக்குகளை வாபஸ் பெறத்தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவது குறித்த அரசின்மனுவை பரிசீலிக்குமாறு ஹூப்ளி நீதிமன்றதுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையே உமா பாரதியின் மீது காங்கிரஸ் அரசு அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டிருப்பதாகக்கூறி வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பெங்களூரில் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி சத்யாகிரகப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+