பொடா: ஜெயலலிதாவுக்கு மோடி ஆதரவு
சென்னை:
பொடா சட்டத்தை வாபஸ் பெறக் கூடாது என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கருத்தைஆதரிப்பதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பொடா சட்ட நீக்கத்துக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஜெயலலிதா எழுதியகடிதத்துக்கு பதில் அனுப்பியுள்ளார் மோடி. அந்தக் கடிதத்தில் மோடி கூறியிருப்பதாவது:
பொடா சட்டத்தை வாபஸ் பெறும் மத்திய அரசின் முடிவை உங்களைப் போலவே நானும்எதிர்க்கிறேன். இச் சட்டம் வாபஸ் பெறப்பட்டால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து நீங்கள்குறிப்பிட்டுள்ள கருத்துக்கள முழுக்க, முழுக்க சரியானவை.
உங்களைப் போலவே நானும் மத்திய அரசுக்கும் பிற மாநில முதல்வர்களுக்கும் பொடாவின்அவசியம் குறித்து கடிதம் எழுதுவேன் என்று கூறியுள்ளார் மோடி.
கோபால் வழக்கில் உத்தரவு:
இதற்கிடையே நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தமிழக அரசு தொடர்ந்த பொடா வழக்கு செல்லுமாஇல்லையா என்பது குறித்து செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிவெடுக்குமாறு பொடா மறு ஆய்வுக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொடா: நாளை வைகோ விடுதலை?
வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீதான பொடா வழக்கு செல்லாது என மறு ஆய்வுக் குழுதெரிவித்தது. இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுவிட்டது.
இதையடுத்து, வைகோ மீதான பொடா வழக்கை வாபஸ் பெறுவதாக பூந்தமல்லி பொடாநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது நாளை நீதிபதி ராஜேந்திரன்தீர்ப்பளிக்கவுள்ளார்.
இதற்காக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வைகோவுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.ஆனால், நடை பயணத்தில் உள்ள வைகோ வருவாரா என்று தெரியவில்லை.
தமிழக அரசின் மனுவை ஏற்று வைகோ மீதான பொடா வழக்கை நீதிமன்றம் செய்யப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications