For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீட்டு வசதி வாரிய ஊழியர்கள் 20 பேர் டிஸ்மிஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பணிபுரிந்த 20 ஊழியர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 22 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் வீட்டு வசதி வாரியத்தில் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதன் நிர்வாக இயக்குநருக்குஅதிக அதிகாரங்களை அரசு வழங்கியது. அதனையடுத்து வீட்டு வசதி வாரிய ஊழியர்கள் மீது நிலுவையில் உள்ளவழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டன.

அதனடிப்படையில் வீட்டுவசதி வாரியத்தில் பணிபுரிந்த 20 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 22பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோனோர் லஞ்சம் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டவர்கள். இதில் பலபேர் பல வருடங்களாக பணிக்கு வராமல் இருந்திருக்கிறார்கள்.

டிஸ்மிஸ் ஆனவர்களில் 4 கண்காணிப்பாளர்கள், 2 இளநிலை உதவியாளர்கள், 6 பணி உதவியாளர்கள், 1 வரைபடஅலுவலர் மற்றும் 2 காவலாளிகள் அடங்குவர்.

வீட்டு வசதி வாரியத்தில் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர்களை வேறு இடத்திற்கு மாற்றம்செய்யும் பணியும் நடந்து வருகிறது. 200க்கும் மேற்பட்ட உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலைபொறியாளர்கள் ஒரே இடத்தில் 10 ஆண்டுகளையும் தாண்டி பணிபுரிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவர்களை வேறு இடத்திற்கு மாற்றும் பணியும் தொடங்கியுள்ளது.

ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக வீட்டு வசதி வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர்தெரிவித்தார். கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும் வாரியத்திற்கு சொந்தமான ரூ. 700 கோடி மதிப்புடையநிலங்களை சட்டத்திற்கு புறம்பாக ஒரு சிலர் சொந்தம் கொண்டாடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அந்தநிலங்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

காண்ட்ராக்டர்களுடன் கோஷ்டி சேர்ந்து கொண்டு மிக பயங்கர ஊழல் நடக்கும் துறைகளில் ஒன்று வீட்டுவசதிவாரியம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரியம் கட்டும் வீடுகள் சில காலத்திலேயே இடிவது, கீறல் விழுவதுவாடிக்கையான விஷயம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X