பெண் பொடா கைதிகள் மருத்துவமனையில் அனுமதி

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூர் மத்திய சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 3 பெண் பொடா கைதிகள்உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் தர்மபுரி காட்டுப் பகுதிக்கு அருகே, நக்சலைட்டுகள் 20 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 6 பேர் பெண்கள். அனைவரும் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திரும்பப் பெறப்படவுள்ள பொடா சட்டத்தை முன் தேதியிட்டு வாபஸ் பெற்று, தங்களை இந்த வழக்கில் இருந்துவிடுவிக்க வேண்டும் என்று கோரி ரீனா மேரி, ரீட்டா மேரி, ஆனந்தி ஆகிய 3 கைதிகளும் வேலூர் சிறையில் 5நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே போல சென்னை சிறையிலும் போராட்டம் நடந்ததாகத் தெரிகிறது. ஆனால், இந்த உண்ணாவிரதத்தைசிறைத் துறையும் போலீசாரும் வெளியில் தெரியாமல் மறைத்துவிட்டனர். கைதிகளின் உறவினர்கள் மூலம் தான்விஷயம் வெளியில் வந்தது.

இந் நிலையில் வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த 3 பெண்களின் நிலைமையும் மிகவும்மோசமடைந்ததால் கடந்த திங்கள்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும் அங்கு சிகிச்சையை ஏற்றுக் கொள்ள அவர்கள் மறுத்து வருகின்றனர்.

ஏற்கனவே சத்யமேரி என்ற மற்றொரு பொடா பெண் கைதி புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+