போராட்டம்: பெங்களூரில் அத்வானி கைது
பெங்களூர்:
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதி மீதான வழக்குகளை வாபஸ் பெறக் கோரிபெங்களூரில் சத்யா கிரகப் போராட்டத்தைத் துவக்கிய முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி கைதுசெய்யப்பட்டார்.
உமா மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக கர்நாடக அரசு அறிவித்துவிட்ட நிலையிலும், முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்று தொடங்கியது.
இன்று காலை பெங்களூர் டவுன்ஹால் ரோட்டில் தேசியக் கொடியை அசைத்து இந்த ஒரு வார காலப்போராட்டத்தை அத்வானி துவக்கினார். இதில் பாஜக தலைவர் வெங்கையா நாயுடு, அக் கட்சியின்செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி, கர்நாடக மாநில பாஜக தலைவர் ஆனந்த் சர்மாஉள்பட கர்நாடகம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. தொண்டர்களும்ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர்.
போராட்டத்தினை தொடங்கிய சிறிது நேரத்தில் அத்வானி உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.அத்வானி சதாசிவ நகர் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அனைவரும்விடுவிக்கப்பட்டனர்.
இந்த போராட்டத்தின் ஒவ்வொரு நாளும் மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள்ஒவ்வொருவரின் தலைமையில் போராட்டம் நடைபெறும். 8ம் நாள் நடைபெறும் போராட்டத்திற்கு முன்னாள்பிரதமர் வாஜ்பாய் தலைமை தாங்குகிறார்.