ஜெ. அதிரடிப்படை காவலர் பஸ் மோதி சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாதுகாப்பு கொடுத்து வரும் அதிரடிப்படையைச் சேர்ந்த காவலர் பஸ் மோதிபலியானார்.
தமிழ்நாடு காவல்துறையின் கமாண்டோ படைப் பிரிவைச் சேர்ந்தவர் காவலர் ராமா ராவ். இவரும், இவருடன்பணியாற்றும் அசோக் மார்ட்டின் என்ற காவலரும், மோட்டார் சைக்கிளில் பணிக்குக் கிளம்பினர்.
வண்ணாரப்பேட்டை அருகே அவர்கள் வந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து மோதியது. இதில் ராமாராவ்சம்பவ இடத்திலேயே பலியானார். அசோக் மார்ட்டின் காயமடைந்தார். உடனடியாக அவர் அரசு பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
ராமாராவ் மரணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ரூ. 1 லட்சம் இழப்பீடும்அறிவித்துள்ளார். அசோக் மார்ட்டினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications