சோ.பாவிடம் வாசன், ப.சி நலம் விசாரிப்பு
மதுரை:
கார் விபத்தில் பலத்த காயமடைந்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோ.பாலகிருஷ்ணனை மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் ஆகியோர் மருத்துவமனையில் சந்தித்து நலம்விசாரித்தனர்.
ராமநாதபுரத்திலிருந்து நேற்று மதியம் பரமக்குடி நோக்கி சோ.பா. காரில் வந்து கொண்டிருந்தபோது, சைக்கிளில்நாகநாதன் என்பவர் குறுக்கே வந்தார். அவர் மீது மோதாமல் இருக்கும் பொருட்டு, காரை டிரைவர் திருப்பினார்.அப்போது அருகே இருந்த முருகன் கோயில் சுவர் மீது கார் மோதியது.
இதில் முன் சீட்டில் அமர்ந்திருந்த சோ.பாலகிருஷ்ணனுக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. கார்டிரைவர் ராமச்சந்திரன், சோ.பா.வின் உதவியாளர் ஆனந்தக்குமார் ஆகியோருக்கு லேசான காயமும், ரோட்டின்குறுக்கே வந்த நாகநாதனுக்கு பலத்த காயமும் ஏற்பட்டது.
நாகநாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழந்தார். சோ.பா. மதுரை அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சோ.பா.வின் முதுகுத் தண்டில் பலத்த அடி ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்குணமடைய ஒருவார காலம் ஆகும் எனவும் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந் நிலையில்ப.சிதம்பரம், வாசன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாலகிருஷ்ணனிடம் உடல் நலம் விசாரித்தனர்.












Click it and Unblock the Notifications