விரைவில் 22,817 ஆசிரியர்கள் நியமனம்: ஜெ.
சென்னை:
ஆசிரியர்கள் தினத்தையொட்டி ஆளுநர் ராம்மோகன் ராவ், முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் ஆசிரியர்களுக்கு வாழ்த்துதெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ராம்மோகன் ராவ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த புதிய மில்லினியத்தில், ஆசிரியர்களின் பங்கும்,செயல்பாடும் மிகப் பெரும் மாற்றங்களை சந்தித்து வருகின்றன.
மக்கள் தொகைக்கு ஏற்ப அதிக ஆசிரியர்கள் மட்டும் நமக்குத் தேவைப்படவில்லை. மாறாக, போதிய திறமைகளுடன், அறிவுக்கூர்மையுடனும், தொழில்நுட்பத்துடனும் போதனை செய்யும் புத்திசாலி ஆசிரியர்களே அதிகம் தேவைப்படுகிறார்கள் என்றுகூறியுள்ளார் ராவ்.
முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கல்வியில் தமிழகம் எப்போதுமே முன்னணியில் உள்ளது. பள்ளிக்கல்விக்கு எனது அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. 2004-05ம் ஆண்டு பட்ஜெட்டில் கல்விக்கு ரூ. 4,203 கோடிஒதுக்கப்பட்டுள்ளது.
எனது அரசு பதவியேற்றுக் கொண்ட பிறகு 22,178 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 22,817 ஆசிரியர்கள்விரைவில் நியமிக்கப்படவுள்ளனர்.
சிறந்த ஆசிரியர்கள் விருது வென்ற அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications