வழக்கை வாபஸ் பெற அரசுக்கு விருப்பமில்லை: வைகோ
விழுப்புரம்:
மதிமுகவினர் மீதான பொடா வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசு உண்மையிலேயே அக்கறை காட்டவில்லை,விரும்பவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோ திண்டிவனம் வந்தடைந்துள்ளார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில்அவர் பேசுகையில், உண்மையிலேயே பொடா வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசுநினைத்திருந்தால், எங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வலியுறுத்தியிருக்கமாட்டார். ஆனால் குற்றச்சாட்டுக்களை அப்படியே வைத்துக் கொண்டு, வெறுமனே வழக்கை வாபஸ் பெறுவதாகநீதிமன்றத்தில் அரசு மனுவில் கூறப்பட்டிருந்தது.
என் மீது எத்தனை வழக்குகளைப் போட்டாலும் அவற்றை சந்திக்க நான் தயார். இலங்கைத் தமிழர்கள் நலனுக்காகநான் குரல் கொடுப்பதில் மாற்றமே இல்லை. இதற்காக சவால்களை சந்திக்கவும் நான் தயார்.
பாலஸ்தீனியர்கள் எப்படி விடுதலைக்காக போராடுகிறார்களோ, அதேபோலத்தான் இலங்கைத் தமிழர்களும்தங்களது உரிமைக்காக போராடி வருகிறார்கள். கியூப நாட்டவர் கொடுக்கும் உரிமைக் குரலைப் போன்றதுதான்இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளும் என்றார் அவர்.