திருக்குறளை தேசிய நூலாக்க வீரமணி கோரிக்கை
ஆரணி:
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.
ஆரணியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் 1,330 குறள்களும் பதிக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழாநடைபெற்றது. அதில் கி.வீரமணி பேசியதாவது:
புலவர் என்பவர் புது உலகத்தைக் காட்டுபவர். அதைச் செய்தவர் திருவள்ளுவர் மட்டுமே. அவரைத் தவிர வேறுயாரும் புலவர்கள் இல்லை என்று தந்தை பெரியார் கூறியுள்ளார்.
அறிவுக்கு முதலிடம் கொடு என்று திருக்குறள் கூறுகிறது. தமிழை செம்மொழியாக அறிவித்தது போல திருக்குறளைதேசிய நூலாக அறிவிக்க அரசியல் தலைவர்கள் முயற்சிக்க வேண்டும்.
பொதுவாழ்க்கையில் இருக்கும் மனிதர்களை பலர் அவதூறாகப் பேசுவார்கள். சேற்றை வாரி இறைப்பார்கள்.இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் லட்சிய நோக்கோடு பொதுத்தொண்டில் ஈடுபட வேண்டும். ஆனால்இப்போது பொதுத் தொண்டு செய்ய வருபவர்கள் பதவிக்கு ஆசைப்பட்டுதான் வருகிறார்கள்.
தந்தை பெரியார் பொது வாழ்க்கையில் சிறப்பாக பணியாற்றியபோது, முதல்வர் பதவியை வேண்டாம் என்றுமறுத்தவர். பெரியாரை ஒருவர் பணம் திருடி விட்டார் என்று கூறினார். அதற்கு மறுப்பு கூறாமல் பணத்தை நான்எடுப்பது போல் ஏன் வைத்தாய் என்று கேட்டவர் பெரியார்.
இவ்வாறு வீரமணி கூறினார்.












Click it and Unblock the Notifications