அதிமுகவின் அண்ணா பிறந்த நாள் விழா
சென்னை:
அண்ணா பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் வருகிற 15-ம் தேதி அதிமுக சார்பில் பொதுக் கூட்டங்கள்நடத்தப்படுகின்றன.
இதுதொடர்பாக அக் கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டிருப்பதாவது:
அறிஞர் அண்ணாவின் 96-வது பிறந்த நாளையொட்டி வருகிற 15ம் தேதி மாவட்டத் தலைநகரங்களிலும், பிறமாநிலங்களிலும் பொதுக் கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த தலைமைக்கழகம் முடிவெடுத்துள்ளது.
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் அந்தந்தப் பகுதிகளில்நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கழகப் பொறுப்பாளர்களுடனும் சிறப்புப் பேச்சாளர்களுடனும் தொடர்புகொண்டு பொதுக் கூட்டங்களை சிறப்பாக நடத்தி அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும்.
தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத இடங்களிலும், பிற மாநிலங்களிலும் ஆங்காங்கே உள்ள அண்ணாவின்உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்த வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications