சென்னை: வீட்டில் ரூ. 10 லட்சம் நகைகள் கொள்ளை
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் தனியாக வசித்து வந்த பெண்ணின் வீட்டில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வைரநகைகள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை சிலர் திருடிச் சென்று விட்டனர்.
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, குட் ஷெப்பர்ட் பள்ளி அருகே வசிப்பவர் கிரண். ஆங்கிலோ இந்தியரான இவரதுமகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார். கடந்த வாரம் கிரணின் மகள் சென்னை வந்திருந்தார்.
அப்போது வைர நகைகள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பல பொருட்களை வாங்கி வந்திருந்தார்.சனிக்கிழமை இரவு கிரணும், அவரது மகளும் வீட்டின் மாடிப் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவுக்குமேல் சிலர் வீட்டின் ஜன்னலை பெயர்த்து உள்ளே நுழைந்துள்ளனர்.
பின்னர் வீட்டில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு அவர்கள்தப்பியுள்ளனர். இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வீட்டில் வேலைபார்த்து வரும்பெண் மீது சந்தேகமடைந்து அவர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications