For Daily Alerts
Just In
தூத்துக்குடி: ரூ.4 கோடி ஹெராயின் பறிமுதல்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ரூ.4 கோடி மதிப்புள்ள ஹெராயினை போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுசந்தேகத்திற்கிடமான வகையில் திரிந்த இரண்டு நபர்களைப் பிடித்தபோது அவர்களிடம் ஹெராயின்பாக்கெட்டுகள் இருந்தன.
பிடிபட்ட ஒருவரது பெயர் அசோக் பெர்னாண்டோ(42). இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். இன்னொருவர்சென்னையைச் சேர்ந்த அப்துல் பாரி (45).
பறிமுதல் செய்யப்பட்ட அந்த போதைப் பொருளின் மதிப்பு ரூ.4 கோடியாகும். இதையடுத்து இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் இந்தப் போதைப் பொருளை புனேயில் இருந்து கடத்தி வந்து, இலங்கைக்கு அனுப்ப முயன்றபோதுபிடிபட்டனர்.
Comments
Story first published: Monday, September 6, 2004, 5:30 [IST]