உசிலம்பட்டி: பார்வர்ட் பிளாக் 3 கோஷ்டிகள் அடிதடி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே உசிலம்பட்டியில் பார்வர்ட் பிளாக் கட்சிகளின் 3 பிரிவுகளுக்கிடையே பயங்கர அடிதடி மோதல்நடந்தது. இது தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவரான மூக்கையாத் தேவரின் மணி மண்டப திறப்பு விழா உசிலம்பட்டியில்நடந்தது. அப்போது பார்வர்ட் பிளாக் கட்சியின் 3 கோஷ்டிகளுக்கிடையே பெரும் மோதல் மூண்டது.
3 பிரிவினரும் கற்களை வீசியும், கட்டைகளால் தாக்கியும் கொண்டனர். அந்தப் பக்கமாக போவோர்வருவோரையெல்லாம் தாக்கினர். இதனால் அப் பகுதியே போர்க்களம் போல் காணப்பட்டது.
இந்த மோதல் தொடர்பாக பார்வர்ட் பிளாக் கட்சியின் வல்லரசு பிரிவைச் சேர்ந்த 16 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 9 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந் நிலையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மூக்கையாத் தேவர் 25வது நினைவு நாள்அனுசரிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications