ரயில்வே திட்டங்கள்: தமிழகத்தில் லாலு 5 நாள் ஆய்வு
சென்னை:
சென்னை எழும்பூர்-தென்காசி இடையிலான சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 20ம் தேதிமுதல் இயங்கவுள்ளது. அதை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கொடியைத்து இயக்கிவைக்கிறார்.
சமீபத்தில் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த ரயில் வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும். ஞாயிற்றுக்கிழமை காலை 4.45 மணிக்கு தென்காசியைசென்றடையும்.
தென்காசியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்குப் புறப்பட்டு திங்கள்கிழமை காலை 6.45மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
இந்த ரயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர்,ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதில் 2 ஏசி பெட்டிகளும் இருக்கும். ராஜபாளையம்-தென்காசி இடையே அமைக்கப்பட்டுள்ளபுதிய அகல ரயில் பாதையில் இயக்கப்படவுள்ள முதல் சூப்பர் பாஸ்ட் ரயில் இது தான்.
16ம் தேதி தனது மனைவியும் பிகார் முதல்வருமான ராப்ரி தேவியுடன் தமிழகம் வரும் லாலு,தமிழகத்தில் மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்பட பல இடங்களுக்கு 5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து ரயில் திட்டப் பணிகளைப் பார்வையிடவுள்ளார்.