வேளாங்கண்ணியில் இன்று சப்பர பவனி விழா
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தில் இன்று சப்பர பவனி விழா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கில்பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஆண்டுதோறும் 10 நாட்கள் நடக்கும் நவ நாள் திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதையடுத்து வேளாங்கண்ணி ஆலயத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வந்தனர்.
தினமும் காலை 5 மணிக்கு தமிழில் திருப்பலியும், நோயாளிகளை மந்திரித்தல், மாதா சொரூப ஆசீர்வாதம் ஆகியநிகழ்ச்சிகளும், இரவு 8 மணிக்கு சிறிய தேர் பவனியும் நடைபெற்றது. 10 நாள் விழாவின் முக்கிய நிகழ்ச்சியானபெரிய சப்பர பவனி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கானபக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.
நாளை மாலை 5.30 மணிக்கு திருத்தல கலையரங்கத்தில் தமிழில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டுஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் தமிழில் பாடல் திருப்பலிமற்றும் மறையுரை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மாதாவின் பிறந்த நாளான வருகிற 8ம் தேதி காலை 6-15 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ், திருநாள் கூட்டுதிருப்பலி நிகழ்ச்சியை நடத்துகிறார். மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கும் விழா நடக்கிறது.












Click it and Unblock the Notifications