ஆளுநருடன் அமைச்சர்கள் குரூப் போட்டோ ரத்து
சென்னை:
ஆளுநர் ராம்மோகன் ராவுடன் தமிழக அமைச்சரவை புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி திடீரென்று ரத்து செய்யப்பட்டது.
மாநிலத்தில் புதிதாக அமைச்சரவை பொறுப்பேற்கும்போதும், அமைச்சரவை மாற்றத்தின் போதும், ஆளுநர், முதல்வர் மற்றும் அனைத்துஅமைச்சர்களும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்து கொள்வது வாடிக்கையாகும். கடந்த மாதம் 27ம் தேதி அமைச்சரவையில் பொள்ளாச்சிஜெயராமனும், விஜயலட்சுமி பழனிச்சாமியும் புதிதாக சேர்க்கப்பட்டபோது, அமைச்சரவை குழு புகைப்படம் எடுக்கப்படவில்லை.
இந் நிலையில் நேற்று ஆளுநர் மாளிகையில் அமைச்சரவை புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்காகஅனைத்து அமைச்சர்களுக்கும் தகவல் தரப்பட்டது.
ஆனால், திடீரென்று இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு விட்டது. ஏன் ரத்து செய்யப்பட்டது என்ற காரணம் வெளியிடப்படவில்லை. நாள்சரியில்லை என்பதால் வரும் 12ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் வரலாம். அதன்பொருட்டுதான் புகைப்படம் எடுப்பது தள்ளிப் போடப்பட்டிருக்கிறதுஎன்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications