For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பணிநீக்கம் செய்யப்பட்ட 9,800 சாலைப் பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட சாலைப் பணியாளர்களை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகஅரசு பணியிலிருந்து நீக்கியது. இதை எதிர்த்து சாலைப் பணியாளர்கள் பல்வேறு வகையான போராட்டத்தில்ஈடுபட்டனர்.

பின்னர் மாநில தீர்ப்பாணையத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அங்கு அவர்களுக்கு 6 மாதத்திற்கான சம்பளத்தைக்கொடுக்குமாறு தீர்ப்பாணையம் அரசுக்கு உத்தரவிட்டது. இருப்பினும் பணியில் சேர்க்குமாறு அரசுக்கு உத்தரவிடமுடியாது என்று தீர்ப்பாணையம் கூறிவிட்டது.

இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்தமனுவை விசாரித்த நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தனது தீர்ப்பைவழங்கியது.

தொழிலாளர் தாவா சட்டத்தை முற்றிலும் மீறும் விதமாக இந்த பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 9,813சாலைப் பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் தமிழக அரசின் கடந்த 2002மாவது ஆண்டு செப்டம்பர் 5ம் தேதிஉத்தரவை நீதிமன்றம் ரத்து செய்கிறது.

அரசின் உத்தரவு முற்றும் சட்டவிரோதமானது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசுசெயல்பட வேண்டும். நல்லதொரு வேலை வாய்ப்பு நிறுவனமாக அது விளங்க வேண்டும்.

பணி நீக்கம் செய்யப்பட்ட 9,813 சாலைப் பணியாளர்களுக்கும் 6 மாத சம்பளத்தை வழங்குவதோடு, அவர்களை 3மாதங்களுக்குள் மீண்டும் வேலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்களதுஉத்தரவில் கூறியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X