கருணாநிதி கோவை வர தடை: ஜெ.விடம் மனு
கோயம்புத்தூர் :
கோவையில் பதற்றத்தையும் பரபரப்பையும் தவிர்க்க திமுக நடத்தும் மாநாட்டில் அதன் தலைவர் கருணாநிதிகலந்து கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.
இந்து மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் அரங்கசாமி ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள மனுவில்கூறியுள்ளதாவது:
வரும் 15ம் தேதி கோவையில் திமுகவின் முப்பெரும் விழா நடக்கிறது. இந்த விழாவில் கருணாநிதி கலந்துகொள்ளவிருக்கிறார்.
அண்மைக்காலமாக இந்துக்களை பகிரங்கமாக அவர் விமர்சித்து வருகிறார். இந்துக்களை திருடன் என்றார்.இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை தரக்குறைவாகப் பேசியுள்ளார். அவரது கட்சியினரும் இந்துவாகபிறந்ததற்கு வேதனைப்படுகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
கோவையில் இந்துக்களும் சிறுபான்மை மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். இந் நிலையில்,கருணாநிதியின் கோவை வருகை தீவிரவாதிகளுக்கு தேவையற்ற உற்சாகமூட்டுவதாக அமையுமோ என்ற அச்சம்எங்களுக்கு எழுந்துள்ளது. இதனால், கோவையில் மீண்டும் பதற்றமும் பரபரப்பும் ஏற்படும்.
எனவே, கருணாநிதி கோவை வருவதற்கு முதல்வர் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications