ஜகார்தா: ஆஸி. தூதரகம் அருகே குண்டு வெடிப்பு
ஜகார்தா:
இந்தோனேஷியாவில் ஆஸ்திரேலிய தூதரகத்துக்கு அருகே மிக சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 7பேர் பலியாகியுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர்.
இது தங்கள் நாட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் என ஆஸ்திரேலியா கருத்துதெரிவித்துள்ளது.
இன்று காலை இச் சம்பவம் நடந்தது. தூதரகத்தின் தடுப்புச் சுவரும் கார்களும் பெரும்சேதமடைந்துள்ளன. அப் பகுதியில் உள்ள பெரிய கட்டடங்களின் கண்ணாடிகளும் சிதறின.
இதில் தூதரக ஊழியர் யாரும் காயமடையவில்லை என ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லின்டால் சேக்ஸ், கேன்பெர்ராவில் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பில் தூதரகத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் பாதுகாப்பு கருதிஊழியர்கள் அனைவரும் வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.
இதற்கிடையே அடிலைடில் நிருபர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்அலெக்ஸான்டர் டோவர், இது எங்கள் நாட்டுக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள தீவிரவாதத் தாக்குதல்தான்.
இந்தோனேஷியாவில் இயங்கும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜமியா இஸ்லாமியாதீவிரவாத அமைப்பு தான் இத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்றார்.
ஆஸ்திரேலியப் பிரதமர் ஜான் ஹாவர்ட், இந்தோனேஷியாவில் நடத்தப்பட்டது கார் வெடிகுண்டுத்தாக்குதல் என்றார். இது தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கலாம் என இந்தோனேஷியாகூறியுள்ளது.












Click it and Unblock the Notifications