இந்திய தூதருடன் இலங்கை தமிழ் எம்பிக்கள் சந்திப்பு
கொழும்பு:
விடுதலைப் புலிகளுக்கு மிக நெருக்கமான தமிழ் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த 7 எம்.பிக்கள்இன்று இலங்கைக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவை சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
தமிழர்களின் பிரச்சனைகள், அமைதிப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தடை, போர் நிறுத்தம் உள்ளிட்டவிஷயங்கள் விவாதிக்கப்பட்டன. சமீபத்தில் தான் நிருபமா இலங்கைக்கானத் தூதராகநியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றே கால் மணி நேரந் நடந்த இச் சந்திப்பின்போது இந்தியத் துணைத் தூதர் மோகன் குமாரும்உடனிருந்தார். இது போன்ற ஆலோசனைகளை தொடர்வது என்று இன்றைய கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டணிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் 22 எம்.பிக்கள் இருப்பதுகுறிப்பிடத்தக்கது.
இலங்கை அமைதி முயற்சிகளில் இந்தியாவும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என புலிகள்கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications