For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனியார்துறையில் இட ஒதுக்கீடு: பாஸ்வான் தீவிரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தனியார் துறையில் தலித்கள், பிற்படுத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதை யாராலும் தடுக்கமுடியாது என மத்திய உரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.

பா.ம.க. சார்பில் இட ஒதுக்கீடு குறித்து ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் பாஸ்வான கூறியதாவது:

அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கிக் கொண்டிருக்கிறோம். இந் நிலையில்தனியார்துறையிலும் இட ஒதுக்கீடு என்பது அத்தியாவசியமாகிறது.

இதனை நிச்சயம் அமலாக்குவோம். அதை யாராலும் தடுக்க முடியாது. ஏதோபிற்படுத்தப்பட்டவர்களும் தலித்களும் திறமை இல்லாதவர்கள் போலவும், அவர்கள் உயர்பதவிகளுக்கு வந்தால் நிறுவனங்கள் சரியாக செயல்பட முடியாது என்பது போலவும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

அரசு நிலத்தை ஒதுக்குவது, வங்கிக் கடன் மாதிரி வேலை வாய்ப்பிலும் ஒடுக்கப்பட்டவர்களுக்குமுக்கியத்துவம் கொடுக்கப்படத் தான் வேண்டும்.

இதை முதலில் எனது உரத்துறையிலேயே அமலாக்கிவிட்டேன். அரசின் உர விற்பனை டீலர்களாக5,000 தலித்களும், 27 சதவீத பிற்படுத்தப்பட்டவர்களும் சிறுபான்மையினரும் நியமிக்கப்படவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அதை அமலாக்குவதை யாராவது தடுக்கட்டும், பார்க்கிறேன். தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்கள்,சிறுபான்மையினர் இணைந்து தங்களது உரிமைகளுக்காகப் போராட வேண்டும்.

தனியார் நிறுவனங்களின் போர்ட் ஆப் டைரக்டர்களை நியமிக்கும்போது தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கச் செய்ய வேண்டும்.

தனியார்துறையில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேசிய ஆய்வுக்கமிட்டியில் நான் இருக்கிறேன். இந்த விஷயத்தில் நான் அதிக அக்கறை காட்டி வருகிறேன் என்றார்.

ராமதாஸ் பேச்சு:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,

நீண்ட காலமாகவே இந்தியப் பொருளாதாரமும், தொழில்துறையும் சமூக நீதிக்கு எதிரானகூட்டத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு திறமைகிடையாது என்று கூறிக் கொண்டு இந்தக் கும்பல் தான் 50 ஆண்டுகளாய் அதிகாரத்தில் இருந்துவருகிறது.

இவர்களால் இந்தியா முன்னேறிவிட்டதா?. ஐ.நாவின் பட்டியலில் இலங்கை, மாலத்தீவுகளுக்குப்பின்னால் 127வது இடத்தில் தான் இருக்கிறது இந்தியா.

தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினரின் உழைப்பை கொஞ்சம் பயன்படுத்தினாலே போதும், நாடுஉருப்பட்டுவிடும். 90 சதவீதமாக உள்ள பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினரை இனியாரும் ஏமாற்ற முடியாது. இது எங்கள் நாடு.

நாங்கள் பிச்சை கேட்கவில்லை. எங்கள் பங்கை கேட்கிறோம். பிறப்புரிமையைக் கேட்கிறோம்என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X