சென்னை புறநகரில் மீண்டும் முகமூடிக் கொள்ளை
சென்னை:
சென்னை தாம்பரம் அருகே ஊராட்சி மன்றத் தலைவரின் ஆடம்பர பங்களாவிற்குள் புகுந்த முகமூடித் திருடர்கள்சுமார் 100 பவுன் நகைகள் மற்றும் ரூ. 25,000 ரொக்கப் பணத்தை அள்ளிச் சென்றுள்ளனனர்.
த ாம்பரம் அருகே உள்ளது முடிச்சூர். இக் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவரான வாசுதேவனுக்கு மிகப் பெரியபங்களா உள்ளது.
அதில், வாசுதேவன் தனது குடும்பத்தாருடன் நேற்றிரவு மாடி அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 2மணியளவில் 4 முகமூடிக் கொள்ளையர்கள், வீட்டின் பின் பக்க ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளேபுகுந்தனர். பின்னர் தப்பிச் செல்ல வசதியாக பின் பக்க கதவைத் திறந்து வைத்துக் கொண்டனர்.
பிறகு, வீட்டின் பீரோவில் இருந்த சுமார் 100 தங்க நகைகள், ரூ. 25,000 பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டுதப்பிச் செல்ல முயன்றனர். அப்போது சப்தம் கேட்டு வாசுதேவன் எழுந்து கீழே வந்தார். கொள்ளையர்களைப்பார்த்து விட்ட அவர், அவர்களைப் பிடிக்க முயற்சித்தார்.
ஆனால் கொள்ளையர்கள் நான்கு பேரும் சேர்ந்து வாசுதேவனைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த துணிகர சம்பவம் குறித்து தாம்பரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications