For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் தலை காட்டிய வீரப்பன்

By Staff
Google Oneindia Tamil News

கொள்ளேகால்:

தன்னைப் பற்றி தகவல் கொடுத்த 6 பேர் தலையை வெட்டிக் கொலை செய்வேன் என்று சந்தனக் கடத்தல் வீரப்பன்கூறியிருக்கிறான்.

வீரப்பனின் சொந்த ஊர் கோபிநத்தம் ஆகும். கோபிநத்தம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன், சேகர், ரவி ஆகியோர்காட்டுக்குள் வேட்டைக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது கும்பலாக வந்த சிலரை அவர்களது நாய்கள் துரத்தின.

நாய்களின் பின்னால் சென்ற 3 பேரும் அங்கு வீரப்பனும் அவனது கோஷ்டியினரும் இருப்பதைப் பார்த்துஅதிர்ச்சியில் உறைந்தனர். வீரப்பனிடம், நாங்கள் போலீஸ் உளவாளிகள் அல்ல, வேட்டைக்காக காட்டுக்குவந்தோம் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர். அவர்கள் வார்த்தையில் உண்மை இருப்பதை தெரிந்து கொண்டவீரப்பன், அவர்களை உட்கார வைத்து சந்தோஷமாக பேசியுள்ளான்.

அப்போது அவர்களிடம் வீரப்பன், எனது சொந்த ஊரிலே உள்ள மாதையா என்ற நல்லூர் மாதையா, நந்தகோபால், சின்னகோபாலன், கிருஷ்ணன், பூபாலன், கர்ணன் ஆகிய 6 பேர் என்னைப் பற்றியும், என் கூட்டத்தைப்பற்றியும் போலீசுக்கு தகவல் கொடுப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் தலைகளை வெட்டாமல் விட மாட்டேன்என்று கூறியுள்ளான்.

பின்னர் வேட்டைக்கு வந்த ஒவ்வொருவருக்கும் தலா 500 ரூபாய் கொடுத்து அனுப்பி வைத்துள்ளான்.

இந்த விவரங்களை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், நண்பர்களிடம் அவர்கள் கூறியுள்ளனர். இது அதிரடிப்படைபோலீஸாருக்குத் தெரிந்து அவர்கள் அந்த 3 பேரையும் பிடித்து விசாரித்துள்ளனர்.

வீரப்பன் எச்சரிக்கை 6 பேர்களில் ஒருவரான மாதையா ஏற்கனவே போலீஸில் சரண் அடைந்து அவர்களின்பாதுகாப்பில் மாதேஸ்வரன் மலையில் இருக்கிறார்.மீதி இருக்கும் 5 பேருக்கு பாதுகாப்பு கொடுக்கவும், அவர்களைதேடி வீரப்பன் வந்தால் அவனைப் பிடிக்கவும் அதிரடிப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

கடைசியாக கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்திக் கொலை செய்ததோடு வீரப்பன்வேறு எந்த கடத்தல், கொலையிலும் இதுவரை ஈடுபடவில்லை. காட்டுப் பகுதியிலேயே பதுங்கிஇருக்கும் அவனை இரு மாநில அதிரடிப்படையினரும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X