கோபால்: அரசுக்கு பொடா மறு ஆய்வுக் குழு கேள்வி
டெல்லி:
நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது போடப்பட்டுள்ள பொடா வழக்குத் தொடர்பான சிலஆவணங்களை அவரிடம் காட்டக் கூடாது என்று தமிழக அரசு கூறியுள்ளது தொடர்பாக விளக்கம்கேட்டுள்ளது பொடா மறு ஆய்வுக் குழு.
அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், தமிழர் விடுதலைப் படையின் நோட்டீஸ்வைத்திருந்ததாகவும் கடந்த ஆண்டு ஏப்ரலில் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டார் கோபால்.நீண்ட சிறை வாசத்துக்குப் பின் ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.
அவர் கைது செய்யப்பட்டது சரியா என்பது தொடர்பான விசாரணை பொடா மறு ஆய்வுக்குழுவின் முன் நடந்து வருகிறது. அவர் மீதான வழக்குத் தொடர்பான அனைத்து ஆவணங்களையும்தங்களிடம் தாக்கல் செய்யுமாறு கடந்த வாரம் மறு ஆய்வுக் குழு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சில ஆவணங்கள் மிகுந்தமுக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் அவற்றை கோபால் தரப்பிடம் காட்டக் கூடாது என்றுகூறியிருந்தார்.
இந் நிலையில் இன்று மறு ஆய்வுக் குழு மீண்டும் தனது விசாரணையை ஆரம்பித்தது. அப்போதுபேசிய குழுவின் தலைவரான நீதிபதி சகார்யா,
விசாரணையின்போது கிடைத்த ஆவணங்கள், சாட்சிகள் ஆகியவற்றை ஏன் கோபாலிடம் காட்டக்கூடாது என்பதற்கு தமிழக அரசு உரிய காரணத்தைச் சொல்ல வேண்டும்.
கோபாலிடம் காட்டக் கூடாது என்று நீங்கள் சொல்லும் ஆவணங்களில் கோபாலே கொடுத்தவாக்குமூலமும் அடங்கும். அவர் கொடுத்த வாக்குமூலத்தைக் கூட அவரிடம் காட்டக் கூடாது என்றுசொல்வது ஏன்?
தன் மீது ஏன் பொடா வழக்குப் போடப்பட்டது என்பதை அறிய குற்றம்சாட்டப்பட்டவருக்கு முழுஉரிமை உண்டு. இதனால், இந்த ஆவணங்களைப் பார்க்கவும் அவருக்கு அதிகாரம் உள்ளது.
அவரிடம் காட்டக் கூடாது என்று சொல்வதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றார்.
அப்போது பேசிய தமிழக அரசின் வழக்கறிஞர் மாத்தூர், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்வரை குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணைத் தகவல்களைத் தெரிவிக்க வேண்டியதில்லைஎன்றார்.
ஆனால், வழக்கை சந்திப்பவருக்கு அவருக்கு எதிரான அடிப்படையான ஆவணங்களைக் கூடகாட்டக் கூடாது என்று சொல்லும் தமிழக அரசு அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும் என்றுசகார்யா கூறினார்.
இதையடுத்து அதிகாரிகளுடன் கலந்து பேச அவகாசம் கேட்டார் மாத்தூர். இதைத் தொடர்ந்துவிசாரணையை நாளைக்கு சகார்யா ஒத்தி வைத்தார்.
-
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications