போட்டா போட்டி வேண்டாம்: கருணாநிதி
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை யார் நிறைவேற்றியது என்பதில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கிடையேபோட்டா போட்டி, போஸ்டர் மோதல் வேண்டாம். அதை கூட்டணிக் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று திமுகதலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
150 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த சேது சமுத்திரத் திட்டம் தற்போது நனவாகியுள்ளது. இதையடுத்துஇந்தத் திட்டத்தை நிறைவேற்ற நாங்கள்தான் நடவடிக்கை எடுத்தோம் என்று திமுக கூட்டணியில் உள்ளகட்சிகளும், அதிமுக, பாஜக போன்ற கட்சிகளும் உரிமை கொண்டாட ஆரம்பித்துள்ளன.
அனைத்துக் கட்சிகளும் எங்கஹால்தான் திட்டம் வந்தது என்று சுவரொட்டிகளை ஒட்டி பெரும் போஸ்டர் போரில்குதித்துள்ளன. இந் நிலையில் இன்று திமுக தலைவர் கருணாநதி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சேது சமுத்திரத் திட்டத்தை ஒவ்வொரு கட்சியும், நாங்கள்தான் இதைக் கொண்டு வர பாடுபட்டோம் என்றுகூறுவதைப் பார்க்கும்போது, சேது சமுத்திரத் திட்டம் தமிழ் மக்களுக்கு உகந்த திட்டம் என்பதுஉறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
150 ஆண்டுகளாக பல்வேறு பெருமக்களால் இந்தத் திட்டம் குறித்து கோரப்பட்டு வந்தது. இருப்பினும் மத்தியில்தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்தத் திட்டம் நிறைவேற முக்கியக் காரணம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த பொதுமக்கள்தான்.அவர்கள்தான் இந்தப் பெருமைக்கு உரியவர்கள்.
திமுகவினர் சிலர், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், அதற்குத்துணையாக குறைந்த பட்ச பொதுத்திட்டம் தயாரித்த குழுவின் தலைவராக இருந்த சோனியா காந்திக்கும் நன்றிகூறும் சுவரொட்டிகளுடன் எனக்குத் தெரியாமல் தேவையில்லாமல் என்னையும் பாராட்டி சுவரொட்டிகள்ஒட்டியுள்ளார்கள்.
இது ஒரு கூட்டு முயற்சி. இந்தத் திட்டம் நிறைவேற தமிழக அரசின் ஒத்துழைப்பும் தேவை என்பதைஆரம்பத்திலேயே, மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு,கூறியுள்ளதும் நினைவு கூறத்தக்கது.
இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்துத்தான் இத்திட்டத்திற்குத் தனிப்பட்ட யாரும் உரிமை கொண்டாடி விளம்பரம்தேடிக் கொள்ளத் தேவையில்லையென்று கருதியதின் விளைவாக கடந்த 7ம் தேதி கூடிய ஜனநாயமுற்போக்குக்கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் நன்றிஅறிவிப்பு என்ற தலைப்பில்,
சேது சமுத்திரத் திட்டத்தினை செயல்படுத்த- சிறப்பு நிறுவனம் ஒன்று அமைத்திருப்பதற்கு குறைந்தபட்ச செயல் திட்டஅமலாக்கக் குழுத் தலைவர் சோனியா காந்தி-, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறோம்.
எனவே அனைத்துக் கட்சிகளுக்கும், குறிப்பாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளகட்சிகளைச் சேர்ந்தவர்களை நான் கேட்டுக் கொள்வது; சேது சமுத்திரத் திட்டத்திற்கு உரிமை கொண்டாடி போட்டாபோட்டி போஸ்டர் யுத்தத்தை தவிர்க்க வேண்டும். இதை ஒரு பிரச்சினையாக மாற்றி, வெற்றி முகட்டை நாம்எட்டுவதை தட்டி விடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார் கருணாநிதி.
-
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரானார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! ஸ்டாலின் பங்கேற்பு -
“பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது” - கமல்ஹாசன் -
மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள் : உடனே சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்! -
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications