குழந்தைக்காக அவசரமாய் தரையிறங்கிய விமானம்
டெல்லி:
டெல்லியில் இருந்து பெங்களூர் கிளம்பிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தஇரண்டரை மாதக் குழந்தைக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து விமானம் உடனடியாகடெல்லிக்கே திரும்பியது.
இன்று காலை 6.15 மணிக்கு ஐ.சி 803 விமானம் பெங்களூருக்குப் புறப்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் பயணித்த நிலையில் முகம்மத் ஹசன் என்ற குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.இதையடுத்து உடனே கேப்டன் எம்.பி.எஸ். கில்லுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து விமானத்தை டெல்லிக்கே திருப்பி இந்திரா காந்தி விமான நிலையத்தில் 8.06மணிக்குத் தரையிறக்கினார்.
குழந்தைக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறலால் விமானம் அவசரமாய் தரையிறங்கியதால்,ஆம்புலன்ஸையும் டாக்டர்களையும் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தினர் தயாராக வைத்திருந்தனர்.
உடனடியாக அக் குழந்தை ஏஐஐஎம்எஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications