For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தண்ணீர்: ஆந்திர முதல்வருக்கு ஜெ. மீண்டும் கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க கிருஷ்ணா நதியிலிருந்து 15 டிஎம்சி தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம்எழுதியுள்ளார்.

ஏற்கனவே கிருஷ்ணா நதி நீர் கோரி ஜெயலலிதா அனுப்பிய கடிதத்துக்கு, தங்கள் அணைகளில் நீர் இல்லாததால்,நீர் தர இயலாது என ரெட்டி பதில் கடிதம் அனுப்பியிருந்தார். இந் நிலையில் ஜெயலலிதா இன்று மீண்டும் கடிதம்அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்தவிடக் கோரி கடந்த 2ம் தேதி ராஜசேகர ரெட்டிக்கு ஜெயலலிதாமுதல் கடிதம் எழுதினார். அக் கடிதத்திற்கு, தண்ணீர் திறந்துவிட முடியாத நிலையில் இருப்பதாக ராஜசேகர ரெட்டிபதில் எழுதினார்.

அதற்குப் பதில் தெரிவிக்கும் முகமாக ஜெயலலிதா எழுதிய கடிதத்தில்,

சென்னையின் குடிநீர் பஞ்சத்தை போக்க கிருஷ்ணா நதியிலிருந்து 15 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும்என்று 1983 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி தமிழக, ஆந்திர அரசுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒப்பந்தம்கையெழுத்தாகி 20 ஆண்டுகள் கடந்த பின்னும் அதில் குறிபிடப்பட்ட அளவு தண்ணீர் தமிழகத்தை வந்துசேரவில்லை.

இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு இதுவரை ரூ.512 கோடியை ஆந்திர அரசுக்கு வழங்கியுள்ளது.

எனவே ஒப்பந்தத்தை மதித்து 15 டிஎம்சி தண்ணீரை கிருஷ்ண நதியிலிருந்து உடனடியாக திறந்து விட வேண்டும்என்று ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X