திண்டிவனம் நீதிபதிக்கு கட்டாய ஓய்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திண்டிவனம் விரைவு நீதிமன்ற நீதிபதி நடராஜனுக்கு தமிழக அரசு கட்டாய ஓய்வு அளித்துள்ளது.
திண்டிவனம் முதலாவது விரைவு விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதியாக நடராஜன் பணிபுரிந்து வந்தார். இவர் மீதுபல புகார்கள் கூறப்பட்டன. புகார்களுக்கு அடிப்படை முகாந்திரம் இருந்ததால் நடராஜனுக்குக் கட்டாய ஓய்வுஅளிக்க சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தது.
இதையடுத்து நீதிபதி நடராஜனுக்கு தமிழக அரசு கட்டாய ஓய்வு அளித்தது. இக் கட்டாய ஓய்வை எதிர்த்துமேல்முறையீடு செய்ய நீதிபதி நடராஜனுக்கு ஒரு மாத கால அவகாசம் தரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications