விபசாரத்தில் ஈடுபட்ட +2 மாணவி, மணப்பெண்
கோயம்புத்தூர்:
விபசாரத்தில் ஈடுபட்ட பிளஸ் 2 மாணவி, திருமண தேதி நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் உள்ளிட்ட 5 பேரைகோவை போலீசார் கைது செய்தனர்.
கோவை அருகே வீரகேரளம், 6வது வீதியைச் சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி ஷீலா என்ற ராதா (30)பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வருவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதனையடுத்து அவரதுசெல்போனில் தொடர்பு கொண்டு வாடிக்கையாளரை போல பேசிய போலீசார், அவரை சிங்காநல்லூர் பஸ்நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையின்படி சிறுவாணி, பெரியார் நகரைச் சேர்ந்த கவிதா (19), உப்பிலிபாளையம்,வி.ஆர்.புரத்தைச் சேர்ந்த வனிதா (24), சிங்காநல்லூர், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த அனுராதா(23),புலியகுளத்தைச் சேர்ந்த சங்கீதா (25) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3செல்போன்கள் மற்றும் ஒரு ஸ்கூட்டி வாகனத்தைப் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிளஸ் 2 மாணவி என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கடந்தசில நாட்களுக்கு முன் இவரது தந்தை இறந்துவிட்டதால், குடும்பக் கஷ்டம் காரணமாக விபசாரத்திற்குவந்திருக்கிறார். இவருக்கு விபசார கும்பலின் தலைவி ராதா தினமும் ரூ.500 கூலியாகக் கொடுத்துள்ளார்.
மற்றொரு பெண்ணுக்கு அடுத்த வாரம் திருமண தேதி நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர் பெற்றோருக்குத் தெரியாமல்விபசார கும்பலுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications