For Daily Alerts
Just In
சாலை விபத்தில் 4 அர்ச்சகர்கள் பலி
மதுரை:
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பிய நான்கு அர்ச்சகர்கள் சாலைவிபத்தில்மரணமடைந்தனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் நடந்த கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அர்ச்சகர்கள் 8 பேர்மாருதி வேன் மூலம் மதுரை திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணித்த வேன் வாடிப்பட்டி அருகே வந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்துடன் இன்று காலைமோதியது. இதில் வேன் டிரைவர் உள்ளிட்ட 9 பேரும் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அனைவரும் மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு நான்குஅர்ச்சகர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். மற்ற 5 பேரும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில்உள்ளனர்.
Comments
Story first published: Monday, September 13, 2004, 5:30 [IST]