For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை கடற்படை சுட்ட மீனவருக்கு ஜெ. உதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இலங்கை கடற்படை வீரர்களால் சுடப்பட்டு காயமடைந்த ராமநாதபுரம் மீனவருக்கு சென்னை அப்பல்லோமருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்சரமாரியாக சுட்டனர். இதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகநாதன் என்ற மீனவரது கழுத்தில் குண்டு பாய்ந்து அவர்படுகாயம் அடைந்தார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு தரப்படும்சிகிச்சை போதுமானதாக இல்லை, மேலும் கழுத்தில் பாய்ந்திருந் குண்டை அகற்றுவதற்கான வசதிகளும் மதுரைமருத்துவமனையில் இல்லை.

இந் நிலையில் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி நாகநாதன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அறுவைச் சிகிச்சை மூலம் கழுத்தில் பாய்ந்திருந்த குண்டு அகற்றப்பட்டது. தொடர்ந்து நாகநாதனுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X