மேலும் 16 அதிகாரிகள் சஸ்பெண்ட்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலட்சுமி விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை தொடங்கப்படவுள்ள நிலையில் அவருடன்தொடர்பு வைத்திருந்த மேலும் 16 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
தனது வாக்குமூலத்தில் ஜெயலட்சுமி 22 பேரை சுட்டிக் காட்டியிருந்தார். இதில் எஸ்.பி. ராஜசேகரன்,இன்ஸ்பெக்டர்கள் மலைச்சாமி, இளங்கோவன், சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டையா கண்ணன்ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டனர்.
ஜெயலட்சுமியுடன் தொடர்புடைய எஸ்.பி. சொக்கலிங்கம் இன்னொரு வழக்கில் ஏற்கனவேசஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்த மேலும் 16 பேரையும் சஸ்பெண்ட் செய்யஅரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications