ஐ.நா. சபையில் சீர்திருத்தம் அவசியம்: கலாம்
தார் எஸ் சலாம்:
ஐக்கிய நாடுகள் சபை எந்த ஒரு தனி நாட்டையும் சார்ந்து இருக்கக் கூடாது, எந்த நாட்டுக்கும் வீடோ அதிகாரமும்இருக்கக் கூடாது என்று ஜனாதிபதி அப்துல் கலாம் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆப்ரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனது பயணத்தின்ஒரு கட்டமாக நாளை தென் ஆப்ரிக்கா செல்கிறார்.
தான்சானியாவில் தற்போது பயணம் மேற்கொண்டிருக்கும் கலாம் நாளை மாலை தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன்நகரை வந்தடைகிறார். அங்கு தென் ஆப்ரிக்க அதிபர் தபோ பெகியைச் சந்தித்து, இரு நாடுகளின் நல்லுறவு,உலகளாவிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கிறார்.
மேலும் இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பை அதிகரிப்பதுகுறித்தும் விவாதிக்கிறார்.
நான்கு நாள் பயணத்தின்போது, முன்னாள் தென் ஆப்ரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவைச் சந்தித்துப் பேசும்கலாம், நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்திலும் உரையாற்றுகிறார்.
பின்னர், 1893ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வகுப்பு பெட்டியிலிருந்து மகாத்மா காந்தி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட பீட்டர்மெரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்திற்கும் கலாம் செல்கிறார்.
இன்று காலை தான்சானியாவில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய கலாம், ஐக்கிய நாட்டு சபையில் எந்தநாட்டிற்கும் வீட்டோ அதிகாரம் இருக்க கூடாது. மேலும் ஐ.நா. சபை எந்த ஒரு தனிப்பட்ட நாட்டையும்(அமெரிக்கா) சார்ந்து இருக்க கூடாது. இது இந்திய அரசின் கருத்து அல்ல; என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க இந்தியா தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அண்டை நாடுகளுடன்பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு பிரச்சனைகளை தீர்க்க முயல்கிறது. பயங்கரவாதத்தைத் தடுக்க உலகளாவிய ஒருஅமைப்பு தேவை என்றார்.