ஜெ: 15ம் தேதி டெல்லி, 19ல் லண்டன் பயணம்?
சென்னை:
மருத்துவ சிகிச்சைக்காக முதல்வர் ஜெயலலிதா 19ம் தேதி லண்டன் செல்வார் என்று தெரிகிறது. அதற்கு முன் 15ம்தேதி டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
ஜெயலலிதா வரும் 15ம் தேதி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.அங்கு தமிழக அரசின் புதிய தமிழ்நாடு இல்ல கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.
பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் அவர் சென்னை திரும்புவார்.
பொறுப்பு முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை நியமிக்கும் கையோடு, 18ம் தேதி அமைச்சரவை மாற்றமும் இருக்கும்என்று கூறப்படுகிறது.
பின்னர் 19ம் தேதி ஜெயலலிதா லண்டன் செல்லலாம் என்று தெரிகிறது. இதற்காக தனியார் விமானத்தைப்பயன்படுத்த மத்திய அரசின் அனுமதி கிடைப்பது காலதாமதமாவதால் முன்னெச்சரிக்கையாக லூப்தான்சாவிமானத்தில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதல்வரின் பயணம் குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக கோட்டை வட்டாரத்தில் கசியும் செய்திகளோடு, மீனம்பாக்கம் விமான நிலைய வட்டாரங்களிலும்விசாரித்துத்தான் நிருபர்கள் செய்திகளை சேகரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications