முனியாண்டிக்கு கையை வெட்டி ரத்த அபிஷேகம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Muniyandi

ரத்தம் தெறித்துக் கிடக்கும் முனியாண்டி சுவாமி சிலை
மதுரையில் தனது கையை பிளேடால் அறுத்து ரத்தத்தை முனியாண்டி சுவாமிக்கு அபிஷேகம் செய்தார் ஒரு வாலிபர்.

மதுரை திடீர் நகர் காவல் நிலையம் அருகே பொன் முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. இங்கு வந்த வேல்பாண்டி (25) என்ற வாலிபர், திடீரென பிளேடால் தனது இடக் கையை அறுத்துக் கொண்டார்.

இந்தக் கீறலில் வெளியேறிய ரத்தத்தை சுவாமி மீது தெளித்தார், இதையடுத்து அருள் வந்தவரைப் போல பெரும் குரலெடுத்து சவுண்டு விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பக்தர்கள் திடீர் நகர் காவல் நிலையத்துக்கு ஓடிச் சென்று தகவல் தந்தனர்.

ஏற்கனவே ஜெயலட்சுமி விவகாரத்தில் எஸ்ஐ உள்பட இரு போலீசார் சிக்கியதால், மண்டை காய்ந்து போயிருக்கும் இந்தக் காவல் நிலைய போலீசார், ஓடி வந்து சாமியாடிக் கொண்டிருந்த வேல்பாண்டியைப் பிடித்தனர்.

உடனே ஒரு ஆட்டோவில் ஏற்றி அவரை அரசு மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தனர். வேல்பாண்டி மதுரையின் பிரபலமாந நடனக் குழுவில் டான்சராக உள்ளாராம்.

ரத்த அபிஷேகம் செய்து கோவிலை களங்கப்படுத்திய வேல்பாண்டியைக் கைது செய்யக் கோரி அப் பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். சிகிச்சை முடிந்து திரும்பியதும் பிடித்து உள்ளே போடுவதாக போலீசார் உறுதிமொழி அளித்ததையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+