கோட்டை முன் மறியல்: நல்லகண்ணு கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி பயிர்க் கடன் வழங்கக்கோரி தலைமைச் செயலகம் முன்பு மறியலில் ஈடுபட்டஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு கைது செய்யப்பட்டார்.

சென்னை நகரின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை போர்க் கால அடிப்படையில்நிறைவேற்ற வேண்டும், விவசாயிகளுக்கு நிபந்தனையற்ற பயிர்க் கடன் வழங்க வேண்டும், விவசாயத்தொழிலாளர்களுக்கு வேலைக்கு உணவுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தினர்.

சென்னையில் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையில் இருந்து நல்லகண்ணு தலைமையில் ஊர்வலமாகசென்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் கோட்டை முன்பு கூடினார்கள். அங்கு கட்சியின் தேசிய செயலாளர் ராஜாபோராட்டத்தை தொடங்கி வைத்தார். அங்கு தடையை மீறி போராட்டம் செய்ய முயன்ற நல்லக்கண்ணு, துணைசெயலாளர் தியாகராஜன், பழனிசாமி எம்எல்ஏ உட்பட 1,000 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் காலியான குடங்களைக் கழுத்தில் கட்டியிருந்தனர். கைதான நல்லக்கண்ணு நிருபர்களிடம்பேசுகையில், எங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரியபோராட்டம் வெடிக்கும் என்று கூறினார்.

அதேபோல் கோவையில் மறியலில் ஈடுபட்ட சுப்பராயன் எம்.பி. உள்பட 850 பேரும், நெல்லையில் அப்பாத்துரைஎம்.பி. தலைமையில் 1,000 பேரும், தஞ்சையில் சிவபுண்ணியம் எம்.எல்.ஏ. தலைமையில் போராட்டம்நடத்தியவர்களும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மாநிலம் முழுவதும் ஏராளமானோர் கைதானார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+