திருப்பதி பிரம்மோற்சவம்: ஆன்-லைன் முன்பதிவு
நகரி: பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆன்-லைனில் தரிசன நேரத்தை முன்பதிவு செய்ய திருப்பதி தேவஸ்தானம்ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை பிரம்மோற்சவ விழாநடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்தபடியே முன்பதிவுசெய்ய தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்காக சென்னை, பெங்களூர், மும்பை, பாண்டிச்சேரி, வேலூர் மற்றும் ஆந்திராவில் 22 மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தங்கும் வசதி, தரிசன நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம்.இந்தமையங்கள் மூலம் 100 அறைகள் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கோவிலுக்கே நேரடியாக டி.டி. அனுப்பி முன் பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள், தேவஸ்தானத்தை 0877-2277681என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.
மேலும் www.ttdsevaonline.comஎன்ற இணையத் தளத்தின் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதில்ரூ.100 முதல் ரூ.700 வரை வாடகை உள்ள அறைகள் மட்டுமே முன்பதிவுக்கு ஒதுக்கப்படும்.
முன்பதிவு செய்து கொண்டதற்கான ரசீதுகளை திருமலை, பத்மாவதி விருந்தினர் மாளிகை அருகில் உள்ள தனிகவுண்டரில் காட்டினால் அறைகளை ஒதுக்கப்படும்.