இணைய தளம் மூலம் விபச்சாரம்: 3 பெண்கள் கைது
சென்னை:
இணையதளம் மூலம் விபசாரத்தில் ஈடுப்பட்ட, மறைந்த நடிகை ராணி சந்திராவின் தங்கை கைது செய்யப்பட்டார்.
விபசார தடுப்பு பிரிவு போலீஸாரின் கடுமையான நடவடிக்கைகளையடுத்து, சென்னையில் இப்போதுஇணையதளம் மூலம் தகவல் கொடுத்து விபசாரத்துக்கு அழைக்கும் புதிய முறை பரவி வருகிறது. இதனையறிந்தபோலீஸார் இணையதளங்களையும் கண்காணித்து வருகிறார்கள்.
இந் நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலுக்கு வாடிக்கையாளர்களைவரச்சொல்லி, ஒரு குறிப்பிட்ட செல்போன் நம்பரையும் கொடுத்து, அழகிகள் வேண்டுமானால் அதில் தகவல்கொடுக்கலாம் என்று ஒரு இணைய தளத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்தத் தகவலைப் பார்த்து உஷாரான உதவி போலீஸ் கமிஷனர் ஆறுமுகசாமி, இன்ஸ்பெக்டர் மதி ஆகியோர்போலீஸ் படையுடன் சாதாரண உடையில் அந்த ஹோட்டலுக்கு சென்றனர். அங்கிருந்தபடி செல்போனில் விபசாரபுரோக்கரைத் தொடர்பு கொண்டு பேசினார்கள்.
சிறிது நேரத்தில் அந்த புரோக்கர் மோட்டார் சைக்கிளில் ஹோட்டலுக்கு வந்தார். அவர் தன் வசம் இருந்தஅழகிகளின் படங்களை காட்டி தேர்வு செய்யச் சொன்னார். போலீஸார் இரண்டு பேரைத் தேர்வு செய்தனர்.
அதனையடுத்து அந்த புரோக்கர் ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள ஒரு பிரபல அடுக்குமாடி குடியிருப்புக்குபோலீஸாரை அழைத்து சென்றார். அங்கு 2-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் 3 அழகிகள் இருந்தனர்.
வீட்டுக்குள் இரண்டு சொகுசு அறைகள் இருந்தன. இதனையடுத்து 3 அழகிகள், புரோக்கர் மற்றும் அந்த வீட்டின்காவலாளி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், கைதானவர்களின் பெயர் மங்காராணி (32), நந்தினி (22), குமாரி (25), மாறன், சுதாஎன்ற சுதாகர் (புரோக்கர்) என்பது தெரியவந்தது. இவர்களில் மங்காராணி, மறைந்த நடிகை ராணி சந்திராவின்தங்கை ஆவார். விபசாரம் நடந்த வீடு இவருக்குச் சொந்தமானதாகும்.
குமாரி, நந்தினி இருவரும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இதற்கிடையே மைலாப்பூரில் உள்ள ஒரு கோவிலில் பக்தர்களை விபசாரத்துக்கு அழைத்ததாக சாரதா, ஷியாமளா,புஷ்பா என்ற 3 அழகிகள் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications