பொடாவை நீடிக்க பிரதமரிடம் ஜெ. வலியுறுத்தல்
டெல்லி:
பொடா சட்டத்தை நீக்கக் கூடாது என பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார்.
டெல்லியில் பிரதமரைச் சந்தித்த அவர், பொடா சட்ட நீக்கத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கோரினார். அத்துடன் பல்வேறு கோரிக்கைகள்அடங்கிய 66 பக்க மனுவையும் கொடுத்தார்.
தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும், திருக்குறவை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும், காவிரி நடுவர் மன்றத்கைக்கலைக்க முயலும் கர்நாடக அரசின் முயற்சிகளைத் தடுக்க வேண்டும், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,
தமிழகத்துக்கு ரூ. 1,680 கோடி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும், 5.4 லட்சம் டன் உணவு தானியம் வழங்க வேண்டும்,
கச்சத் தீவை மீட்க வேண்டும், தமிழகத்துக்கு கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்க வேண்டும் தமிழ் உள்ளிட்ட 18 தேசிய மொழிகளையும்மத்திய அரசின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 கோரிக்கைகள் அடங்கியிருந்தன.
மேலும் தமிழகத்தின் வறட்சி நிலை குறித்தும் பிரதமரிடம் விளக்கினார். அப்போது, வறட்சி நிலையை ஆராய விரைவில் ஒரு மத்தியக்குழுவை தமிழகத்துக்கு அனுப்புவதாக ஜெயலலிதாவிடம் பிரதமர் உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பு சுமார் 35 நிமிடங்கள் நீடித்தது. மன்மோகன் சிங் பிரதமரான பின் அவரை முதல்வர் ஜெயலலிதா சந்திப்பது இதுவேமுதன்முறையாகும்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, மன்மோகன் சிங் மிகச் சிறந்த மனிதர். நேர்மைக்கு பெயர் போனவர். எனதுகோரிக்கைகளை பரிவுடன் கேட்டார். தமிழகத்தின் நிர்வாகம் மிகச் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டினார் என்றார்.












Click it and Unblock the Notifications