அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி: 22 பேர் பலி
புளோரிடா:
| அமெரிக்காவின் புளோரிடா, லூசியானா மாகணங்களை பயங்கர சூறாவளிப் புயல் தாக்கியதில் 22 பேர்பலியாகியுள்ளனர்.
ஹரிக்கேன் இவான் த ஈவில் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி கடந்த 2 வாரங்களில் டோபாகோ,கேமேன் தீவுகள், டொமினிக்கன் ரிபப்ளிக், ஜமைக்கா, வெனிசுவேலா, கிரனடா ஆகிய நாடுகளைத் தாக்கிநூற்றுக்கும் மேற்பட்டவர்களை உயிர் பலி வாங்கிவிட்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைத்தாக்கியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக பயங்கரமான சூறாவளி என்பதால், புளோரிடா, லூசியானாமாகாணங்களின் கடலோர நகர மக்களில் பெரும்பாலானவர்கள் இரு தினங்களுக்கு முன்பே வீடுகளைக் காலிசெய்துவிட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். இதனால் பயங்கர காற்றுக்கும் கடும் மழைக்கும் இடையே பல பகுதிகள் ஆள் ஆராவாரமே இல்லாமல்காணப்பட்டன. |
இந் நிலையில் வியாழக்கிழமை இரவில், மணிக்கு 217 கி.மீ. வேகத்தில் புயல் புளோரிடாவுக்கும்லூசியானாவுக்கும் இடையே கரையைக் கடந்தது. அதனுடன் 12 டொர்னேடோக்களும் சேர்ந்து கொண்டு இப்பகுதியை தாக்கியதில் அமெரிக்காவின் தென் பகுதி கடலோரப் பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
வீடுகள் காற்றில் பறந்தன, மரங்களை சூறாவளி பிய்த்து எடுத்து எறிந்தது. பென்சகோலா உள்பட பல இடங்களில்பாலங்கள் கூட பயங்கர காற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.அலபாமா, லூசியானா, மிசிசிபி ஆகிய பகுதிகள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
">புளோரிடாவை சமீபத்தில் தான் சார்லி, பிரான்சஸ் ஆகிய புயல்கள் தாக்கின. 6 வாரங்களில் மூன்றாவதுமுறையாகவும் இப்போது புயல் தாக்கியுள்ளது.
இதற்கிடையே, கரீபியன் தீவுகளுடன் கியூபாவும் சூறாவளியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால்உடனடியாக உலக நாடுகள் பெருமளவில் உதவ முன் வர வேண்டும் என செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.













Click it and Unblock the Notifications