For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாமல்லபுரம்: புதிய அதிஷ்டானம் கண்டுபிடிப்பு

By Staff
Google Oneindia Tamil News

மாமல்லபுரம்:

உலக மரபுச் சின்னங்களில் ஒன்றான மாமல்லபுரத்தில் புதிய அதிஷ்டானம் (பெரும் கல்மேடை)கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் கடற்கரைக் குடைவரை கோவில், ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட ஐந்து ரதங்கள் உள்ளிட்டசிற்பங்கள் ஆகியவை உலகப் புகழ் பெற்றவை.

ஐந்து ரதங்களில் ஒன்றான துர்க்கை ரதத்தைச் சுற்றி சமீப காலமாக தண்ணீர் தேங்கி நின்று வருகிறது. இதையடுத்துஅதை சரி செய்வதற்காக தொல்பொருள் ஆய்வுத் துறையினர், துர்க்கை ரதத்தை சுற்றிலும் மண்ணைத் தோண்டினர்.

அப்போது துர்க்கை ரதத்திற்குக் கீழே புதிய அதிஷ்டானம் (பெரும் கல் மேடை) கண்டுபிடிக்கப்பட்டது. இந்தஅதிஷ்டானத்தில் சிங்கம் மற்றும் யானை சிற்பங்கள் அடுத்தடுத்து செதுக்கப்பட்டுள்ளன.

இந்த அதிஷ்டானமும், துர்க்கை ரதமும் ஒரே கல்லினால் செதுக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஐந்து ரதங்களில் சிறியதாக கருதப்பட்ட துர்க்கை ரதம் தற்போது, இந்த கல்மேடையையும் சேர்த்து மற்ற ரதங்களைவிட உயரம் அதிகமானது என்று தெரியவந்துள்ளது.

புதிய அதிஷ்டானத்தைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X