பெண் ஊழியருக்கு செக்ஸ் தொல்லை தந்த அதிகாரி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெண் ஊழியருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த சென்னை ரயில்வே அதிகாரியை பணி நீக்கம் செய்து, அவர் மீதுநடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை ரயில்வே பணியாளர் கூட்டுறவு சங்கத்தின் உதவிச் செயலாளராக இருப்பவர் நாககேசரி.

இவர் இந்த அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்க்கும் ஸ்ரீலதா என்பவருக்கு பாலியல்ரீதியில் தொல்லைகள்தந்துள்ளார்.

தனது அறைக்கு தேவையில்லாமல் அழைப்பு, அலுவலகம் இல்லாத நாட்களில் வரச் சொல்லி சில்மிஷம் செய்வது,திடீரென அருகே வந்து உரசுவது, ஸ்ரீலதாவை பார்வையாலேயே அளப்பது என பல வகைகளில் துன்பம்தந்துள்ளார்.

இதையடுத்து தமிழக முதல்வரின் தனி செல்லுக்கும், போலீஸ் கமிஷ்னருக்கும், தேசிய மனித உரிமைஆணையத்துக்கும் புகார் அனுப்பினார் ஸ்ரீலதா. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந் நிலையில் தன் மீது ஸ்ரீலதா புகார் அனுப்பியதைத் தெரிந்து கொண்ட நாககேசரி, தனது செல்வாக்கைப்பயன்படுத்தி ஸ்ரீலதாவை சஸ்பெண்ட் செய்ய வைத்துள்ளார். பின்னர் மீண்டும் பணி கிடைத்துள்ளது. ஆனால்,இம்முறை கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் வேலை தரப்பட்டது. இதையடுத்து மீண்டும் அவர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்.

நொந்து போன ஸ்ரீலதா தேசிய மகளிர் ஆணையத்துக்கு புகார் அனுப்பினார். இதையடுத்து அந்த ஆணையம்விசாரணையில் இறங்கியது.

இந்த ஆணையத்தின் சார்பில் நீதிபதி சம்பத், முன்னாள் டிஐஜி ராஜகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைநடத்தியதில் நாககேசரி மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை பணி நீக்கம் செய்துநடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+