சென்னையில் கன மழை: சாலைகளில் வெள்ளம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை நகரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழைக்கு கூடுதல் டிஜிபியின் கார் சேதமடைந்தது. நகரின்பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியிருந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் தண்ணீர்ப் பிரச்சினையில் சிக்கியுள்ளமக்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.

நேற்று கன மழை பெய்ததில் தலைமைச் செயலக வளாகத்தில் இருந்த பெரிய மரம் வேரோடு சரிந்தது. மரம்விழுந்து, அதன் கீழ் நிறுத்தப்பட்டிருந்த அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி, கூடுதல் டிஜிபி நடராஜன்ஆகியோரின் கார்கள் சேதமடைந்தன.

அப்போது கார்களில் யாரும் இல்லை. தீயணைப்புத் துறையினர் வந்த பிறகே கார்களை மீட்க முடிந்தது.

இதேபோல நகரின் பல்வேறு பகுதிகளிலும் கன மழையால் தண்ணீர் தேங்கியும், மரங்கள் விழுந்தும்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

வேளச்சேரி, திருவான்மியூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர்தேங்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+