செங்கல்பட்டு சட்டக்கல்லூரியை மாற்ற கோரி வழக்கு
சென்னை:
செங்கல்பட்டு சட்டக் கல்லூரியை சென்னைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட் டுள்ளது.
இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டில் கடந்த ஆண்டு புதிய சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த சட்டக் கல்லூரியில் மொத்தம் 240மாணவர்கள் உள்ளனர். ஆண்டுக்கு ரூ.17,000 கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் கல்லூரிக்கு சொந்தமான கட்டிடம் இல்லை. தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சினிமா தியேட்டர் அருகேஉள்ள வணிக வளாக கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் வாடகைக்கு இந்த சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது.
கல்லூரி அருகே மதுபானக் கடையும் உள்ளது. இப்படி அமைதியற்ற இடத்தில் இந்த சட்டக் கல்லூரி உள்ளது.போதிய கழிப்பிட வசதியும், குடிநீர் வசதியும் கல்லூரிக்கு இல்லை. மேலும் கல்லூரிக்கு முதல்வர் இல்லை. 3ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
கல்லூரிக்கு விளையாட்டு மைதானம் இல்லை. கணிப்பொறி வசதி இல்லை. குறுகலான படியில்தான் ஏறி செல்லவேண்டியுள்ளது. வசதியை செய்து தரவேண்டும் என்று கூறினால் கல்லூரி நிர்வாகம் அந்த மாணவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கிறது.
எனவே, செங்கல்பட்டில் இருக்கும் சட்டக் கல்லூரியை சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சட்டபல்கலைக்கழகத்திற்கு மாற்றவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த சட்டக் கல்லூரியை எந்த இடத்திற்கு மாற்றுவது என்பது வரும்27ம் தேதிக்குள் கண்டறிய முடியும் என்று கூறியதால் நீதிபதி தினகர், நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர்விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications