ஜெ. எது வேண்டுமானாலும் பேசுவார்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா எது வேண்டுமானாலும் பேசுவார் என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று கூறினார்.

அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை என்று ஜெயலலிதா கூறி உள்ளார்.சோனியாவுக்கு பதிபக்தி கிடையாது என்று கூறியது பொதுவான விமர்சனமா? அது பொதுவான விமர்சனம்என்றால் தமிழக மக்கள் யாருக்கும் பதிபக்தி கிடையாது என்று சொன்னதாகத் தான் அர்த்தம்.

ஒவ்வொரு மேடையிலும் சோனியாவை அரைவேக்காடு, வெளிநாட்டுக்காரி, பதிபக்தி இல்லாதவர் என்றுஜெயலலிதா பேசியது உண்டா? இல்லையா?

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களை புறக்கணிக்கும் வகையில் தமிழக அரசு விழாக்கள்நடத்தப்படுகின்றன. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் பெயர்கள் கூட அரசு விழாவில்புறக்கணிக்கப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா முன்னுக்குப் பின் முரணாக எதுவேண்டுமானலும் பேசுவார்.

திமுக, -காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படுத்த திட்டமிட்டு பிரசாரம் நடத்தப்படுகிறது. அதில் அவர்கள்வெற்றிபெற முடியாது.

கடந்த ஆட்சியில் வாஜ்பாயிடமும் அத்வானியிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் கூட பொடா திரும்பபெறப்படவில்லை. அதேபோல தமிழை செம்மொழி ஆக்கவும், சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றவும்முன்வரவில்லை. ஆனால் இப்போதைய அரசு பதவியேற்ற 100 நாட்களில் இது போன்ற கோரிக்கைகள்நிறைவேறி இருக்கின்றன.

பொடா தொடர்பான பழைய வழக்குகளை வாபஸ் பெற தமிழக ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில்வலியுறுத்துவோம். தமிழ் உள்பட அட்டவணை மொழிகளை மத்திய ஆட்சி மொழியாக்கும் முயற்சியில்ஈடுபடுவோம் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+