ஜெயலட்சுமி: திருச்சி போலீஸை கலங்கடித்த எஸ்.எம்.எஸ்.
திருச்சி:
சிவகாசி ஜெயலட்சுமியின் ஆபாச சிடி வேண்டுவோர் அனைத்து போலீஸ் நிலையங்களைத் தொடர்பு கொள்ளவும்என்று செல்ஃபோன்களில் எஸ்.எம்.எஸ். அனுப்பிய மர்ம நபரை திருச்சி போலீஸார் தேடி வருகின்றனர்.
தமிழக காவல்துறையைத் தாண்டி அரசியல் வட்டாரத்தையும் கலக்கி வரும் ஜெயலட்சுமியை மையமாக வைத்துதிருச்சியில் ஒரு எஸ்.எம்.எஸ். புரளி கிளம்பியது. திருச்சியில் பெரும்பாலான செல்ஃபோன்களில் வந்தஎஸ்.எம்.எஸ். தகவலில்,
சிவகாசி ஜெயலட்சுமியின் ஆபாச சிடி தயராக உள்ளது. வாடகை ஒரு நாளைக்கு ரூ.100. தேவைப்படுபவர்கள்தொலைபேசி எண் 100 அல்லது அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களை தொடர்பு கொள்ளவும். இது புதுசு கண்ணாபுதுசு. இப்படிக்கு ஐ.ஜி. என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பொய்யான எஸ்.எம்.எஸ். தகவலால் திருச்சி போலீஸார் ஏகத்துக்கும் எரிச்சல் அடைந்துள்ளனர். இந்தத்தகவலை அனுப்பிய மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து திருச்சி காவல் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், இது குறித்து மக்கள் எவரும் புகார்செய்யவில்லை. இருப்பினும் போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி தவறான தகவலை பரப்பிய விஷமி மீதுசட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.