முகமது அலியின் காவல் மீண்டும் நீட்டிப்பு
சென்னை:
போலி முத்திரைத்தாள் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட டி.ஐ.ஜி. முகமது அலி, உதவி கமிஷனர் சங்கர்,மதுரை எல்.ஐ.சி. அதிகாரி சாது ஆகியோரின் காவல் 6வது முறையாக நீடிக்கப்ப்டடது.
அவர்கள் கைது இன்றுடன் 84 நாட்கள் ஆகிறது. சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும்அவர்களை இன்று மீண்டும் காவல் நீட்டிப்புக்காக போலீஸார் எழும்பூர் நீதிமன்றத்திற்குக் கொண்டுவந்தனர்.கூடுதல் தலைமை மாநகர நீதிபதி அருள்ராஜ் முன்பு அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அவர்கள் காவலை அடுத்த மாதம் 8-ம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.
முகமது அலியுடன் கைது செய்யப்பட்ட உதவி கமிஷனர் சங்கர் ஜாமீன் கேட்டு 3வது முறாைக இன்று அதேநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையை வருகிற 29-ம் தேதிக்கு நீதிபதிஒத்திவைத்தார்.
முகமது அலி கைதாகி இன்றுடன் 84 நாள் ஆகிவிட்டது. 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்படவில்லை என்றால், அவர் ஜாமீனில் வெளியே வர வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சிபிஐவழக்கறிஞரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது.அதற்கு இன்னும் 6 நாட்கள் கால அவகாசம் இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications