உமா பாரதியுடன் மோதல் இல்லை: நாயுடு
சென்னை :
மூத்த பாஜக தலைவர் உமா பாரதியுடன் கருத்து வேறுபாடோ, பனிப்போரோ இல்லை என்று அகில இந்தியபாஜக தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் முன்பு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் அவர் கூறியதாவது:
நான் பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமென்று சில பத்திரிக்கைகள் விரும்புகின்றன. அவர்களின்ஆசையை நிறைவேற்றுவதற்காக தலைவர் பதவியை நான் ராஜினமா செய்ய மாட்டேன்.
எனக்கும் உமா பாரதிக்கும் கருத்து வேறுபாடோ, பனிப்போரோ கிடையாது. இதுகுறித்து வருவதெல்லாம்பொய்யான செய்திகள்களாகும். முன்பு அத்வானியின் ரத யாத்திரை நாடு முழுவதும் பிரபலமாகபேசப்பட்டதுபோல், இப்போது உமா பாரதியின் மூவர்ண யாத்திரை பேசப்பட்டு வருகிறது.
உமா பாரதியின் யாத்திரைக்கு பாஜக சரியான முறையில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பது தவறானகுற்றச்சாட்டு. கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை உமா பாரதியின்யாத்திரையில் பங்கேற்று அவரை உற்சாகப்படுத்தி வருகிறோம். யாத்திரை நிறைவு பெறும்போது முன்னாள் பிரதமர்வாஜ்பாய், நான் உட்பட எல்லோரும் கலந்து கொண்டு வாழ்த்தவிருக்கிறோம் என்று வெங்கையா நாயுடு கூறினார்.