கிருஷ்ணசாமி வழக்கு: விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீதான கொலை வழக்கை தூத்துக்குடி விரைவுநீதிமன்றத்திற்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருந்த முத்து கிருஷ்ணன் என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், டாக்டர் கிருஷ்ணசாமியும்ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கைவேறு மாவட்டத்திற்கு மாற்றக் கோரி டாக்டர் கிருஷ்ணசாமி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. மேலும், மாஜிஸ்திரேட்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மிகவும் தாமதமாக நடக்கிறது. இதுவரை 34 முறை விசாரணைஒத்திப்போடப்பட்டுள்ளது. எனவே வேறு மாவட்டத்திற்கு இதை மாற்ற வேண்டும் என்றுகூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி தணிக்காச்சலம், இந்த வழக்கை தூத்துக்குடி விரைவு நீதிமன்றத்திற்குமாற்றி உத்தரவிட்டார்.

ஆனால், வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி நிராகரித்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+